Tuesday, February 17, 2009

ஆம் தலைவர்களே! தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்

ஆம் தலைவர்களே! தமிழகத்தின் தலைவிதியை உங்களால் மாற்ற முடியும்

மாற்றம்நம்பி



இன்று தெற்காசியத் தமிழர் அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் தமிழீழப் விடுதலைப் போர் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. அது தமிழகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதிர்வலைகள் தமிழ்நாட்டு அரசியலையும் நெருக்கடிக் குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த நூற்றண்டின் தமிழக அரசியல், சமூக மாற்றத்தை காங்கிரஸ், திராவிடர், பொது உடமை இயக்கங்கள் தீர்மானித்தன. கடந்த நூற்றாண்டில் முதல் 65 ஆண்டுகளில் தமிழகத்தின் தேர்தல் அரசியலை பெரும்பாலும் காங்கிரஸ் ஆக்கிரமித்திருந்தது. அடுத்த 40 ஆண்டுகளாக திராவிடர் இயக்கத்திலிருந்து உருவான கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் இருந்து வருகின்றன. திராவிட இயக்கத்தின் உள்ளிருந்து உருவான கட்சிகள் தம் கொள்கைகளிலிருந்தும், நோக்கத்திலிருந்தும் பெருமளவு நீர்த்துப் போயுள்ளதை பெருங்கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை தெளிவாக புலப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஈழ விடுதலைப் போருக்கு ஆதரவாக நின்ற எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க கட்சியின் தலைமை இன்று “ஈழத்தமிழர்கள் என்பவர்களே இல்லை” என்றும், “போரில் சாதரண மக்கள் சாவது சகஜம்” என்றும் கூறும் இரக்கமற்ற ஜெயலலிதாவின் இறுக்கப்பிடிக்குள் இருக்கிறது. எம்.ஜி.ஆரின். இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகள் ஜெயலலிதாவின் காலடியிலும், அவருடைய காரின் சக்கரத்தடியிலும் பணிந்துக் கிடக்கின்றனர்.

தமிழரின் வீரதீரப் பிரதாபங்களை, அருமைப் பெருமைகளை, வாய் ஓயாமால் பேசியும், கை ஓயாமல் எழுதியும் வருகின்ற தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி குறுகியகால அரசியல் ஆதாயத்திற்காக ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறைக்கு துணைபோகும் இந்திய அரசுக்கு அடிபணிந்து செயலிழந்து கிடக்கிறார். அக்கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் என அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவரின் வாரிசுகளான மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன் போன்றவர்களோ இப்பிரச்சினைப் பற்றி ஒரு கருத்தை வெளியிடும் திராணிகூட இல்லாமல் கட்சியையும், அரசியல் அதிகாரத்தையும் குடும்பத்துக்குள் பங்குபிரித்துக் கொள்ளும் முயற்சியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளிடம் அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி என்னென்ன பெயரில் வந்தாலும், எத்தனைத் தலைமைகள் மாறியபோதும் மீண்டு எழ இயலவில்லை. அக்கட்சி அதற்கான காரணங்களை ஆய்ந்தறியும் திறனின்றி ஒரு புறம் இந்திரா காந்தி குடும்பத்துக்குக் காவடி தூக்கிக்கொண்டும், இன்னொரு புறம் ஏதாவதொரு திராவிடக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்துகொண்டுமே கடந்த 40 ஆண்டுகளாக தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தொண்டர்களைவிடத் தலைவர்களை அதிகமாகக் கொண்ட ,தமிழகத்தில் அந்நியமாகிப்போன காங்கிரஸ் கட்சி டெல்லியில் பெற்றுள்ள அதிகார மமதையின் காரணமாகத் தமிழர்களுக்கு இன்னுமொரு வரலாற்றுத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது.

முழுக்கட்டுரையை வாசிப்பதற்கு இங்கே செல்லுங்கள்
http://www.keetru.com/literature/essays/matramnambi.php

Labels: ,


Comments: Post a Comment



<< வீடு

This page is powered by Blogger. Isn't yours?